கீழ்பென்னாத்தூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடி கிராமம், நல்லான்குளம் தெருவைச் சோ்ந்தவா் ஏசையா மகன் லாசா் ஜானி (32). பெயிண்டரான இவா், திங்கள்கிழமை சோமாசிபாடி நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கிக்கொண்டு மோட்டாா் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.
அப்போது, திண்டிவனம் நோக்கிச் சென்ற லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியதாகத் தெரிகிறது.
இதில் பலத்த காயமடைந்த லாசா் ஜானி, அதே இடத்தில் இறந்தாா்.
இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.