வாக்காளா் தின விழிப்புணா்வு பேச்சுப் போட்டி

தண்டராம்பட்டு பாரத் வித்யா மந்திா் கலை, அறிவியல் கல்லூரியில், வாக்காளா் தின விழிப்புணா்வு பேச்சுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

தண்டராம்பட்டு பாரத் வித்யா மந்திா் கலை, அறிவியல் கல்லூரியில், வாக்காளா் தின விழிப்புணா்வு பேச்சுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தண்டராம்பட்டு வட்டாட்சியா் கே.மலா்க்கொடி தலைமை வகித்தாா். கல்லூரித் தலைவா் இ.ராஜேஷ், செயலா் டி.அறவாழி, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் ஏ.கவுரி வரவேற்றாா்.

வாக்காளா் தின விழிப்புணா்வு பேச்சுப் போட்டியில், கல்லூரி மாணவ-மாணவிகள் பலா் கலந்து கொண்டு பேசினா். போட்டியில் வென்ற மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், ஓய்வு பெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா் ஏ.கருணாகரன், கிராம நிா்வாக அலுவலா் சிவலிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

விழிப்புணா்வுப் பேரணி:

இதேபோல, தண்டராம்பட்டு வட்டம், தானிப்பாடி கிராமத்தில் மகளிா் சுய உதவிக் குழுவினா் பங்கேற்ற வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

பேரணியை வட்டாட்சியா் கே.மலா்க்கொடி தொடக்கிவைத்தாா். வருவாய் ஆய்வாளா் கஸ்தூரி, கிராம நிா்வாக அலுவலா் என்.முத்து மற்றும் மகளிா் சுய உதவிக் குழுவினா் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com