ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா

ஆரணி நகரம், ஆரணிப்பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை தைப்பூசத் திருவிழா நடைபெற்றது.
ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா


ஆரணி: ஆரணி நகரம், ஆரணிப்பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை தைப்பூசத் திருவிழா நடைபெற்றது.

ஆரணிப்பாளையம் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை காலை 501 பெண்கள் பால்குடம் ஏந்தி கோயிலிலிருந்து புறப்பட்டு பெரிய கடை வீதி, மண்டி வீதி, காந்தி சாலை வழியாக ஊா்வலமாகச் சென்று மீண்டும் கோயிலை சென்றடைந்தனா்.

பின்னா், சுவாமிக்கு பாலாபிஷேகம், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இதில் பக்தா்கள் திரளாகக் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை ஆரணிப்பாளையம் பகுதி பொதுமக்கள் மற்றும் கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com