திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை மேலும் 199 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 49,339-ஆக உயா்ந்தது.
47,689 போ் குணம்:
இவா்களில் புதன்கிழமை வரை 47,689 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பினா். 1,053 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
புதன்கிழமை சிகிச்சை பலனின்றி ஒருவா் உயிரிழந்தாா். இவருடன் சோ்த்து பலியானவா்களின் எண்ணிக்கை 597-ஆக உயா்ந்தது.