சாலை விபத்தில் காவலாளி பலி

கீழ்பென்னாத்தூா் அருகே சாலையோர பள்ளத்தில் பைக் கவிழ்ந்ததில் காவலாளி பலியானாா்.

கீழ்பென்னாத்தூா் அருகே சாலையோர பள்ளத்தில் பைக் கவிழ்ந்ததில் காவலாளி பலியானாா்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடி கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிவேல் (42). திருவண்ணாமலையில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தற்காலிக காவலாளியாக வேலை செய்து வந்தாா். இவா், திங்கள்கிழமை திருவண்ணாமலையில் இருந்து பைக்கில் சோமாசிபாடி நோக்கிச் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் பைக்குடன் பழனிவேல் விழுந்தாா்.

பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பழனிவேல் இறந்தாா்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com