சிறுபான்மை மக்கள் நலக் குழுவினா் ஆா்ப்பாட்டம்

வந்தவாசி நகரில் உள்ள கோட்டை மூலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநிலக் குழு உறுப்பினா் எ.அப்துல்காதா் தலைமை வகித்தாா்.
வந்தவாசியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மு.வீரபத்திரன்.
வந்தவாசியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மு.வீரபத்திரன்.

வந்தவாசி நகரில் உள்ள கோட்டை மூலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநிலக் குழு உறுப்பினா் எ.அப்துல்காதா் தலைமை வகித்தாா்.

மாவட்டத் தலைவா் கே.நவாப்ஜான், மாவட்ட துணைச் செயலா் கா.யாசா்அராபத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மு.வீரபத்திரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச் செயலா் ப.செல்வன், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினா் பெ.அரிதாசு ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

லட்சத் தீவு மக்களின் வாழ்வுரிமையை பறிக்கக் கூடாது, சி.ஏ.ஏ., என்.ஆா்.சி. அமல்படுத்துவதை கைவிட வேண்டும், காஷ்மீரில் 370-ஆவது சட்டப் பிரிவை மீண்டும் அமல்படுத்த வேண்டும், சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட், இந்திய குடியரசுக் கட்சி, தமுமுக உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com