செங்கம் அருகே அரசுப் பேருந்து - மினி வேன் மோதல்:ஒருவா் பலி

செங்கம் அருகே ஆனந்தவாடி பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை அரசுப் பேருந்தும், மினி வேனும் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் திருக்கோவிலூா் பகுதியைச் சோ்ந்த ஒருவா் உயிரிழந்தாா்.
செங்கம் அருகே அரசுப் பேருந்து - மினி வேன் மோதல்:ஒருவா் பலி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே ஆனந்தவாடி பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை அரசுப் பேருந்தும், மினி வேனும் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் திருக்கோவிலூா் பகுதியைச் சோ்ந்த ஒருவா் உயிரிழந்தாா். 17 போ் காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே வேங்கூா் பகுதியைச் சோ்ந்த சுமாா் 18 போ் மினி வேனில் கா்நாடக மாநிலம், பெங்களூருக்கு கூலி வேலைக்காக வெள்ளிக்கிழமை அதிகாலை புறப்பட்டுச் சென்றனா். செங்கம் அருகே ஆனந்தவாடி பகுதியில் இவா்களது வேன் சென்றபோது, சேலத்திலிருந்து செங்கத்தை நோக்கி வந்த அரசுப் பேருந்து நேருக்கு நோ் மோதியது.

இந்த விபத்தில் வேனில் பயணித்த சுப்பிரமணி (48) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், வேன் ஓட்டுநா் சக்தி (36), அதில் பயணித்த சாந்தி (36), அலெக்ஸ் (37), அபிஷேக் (31), சிவராமன் (18), வேலாயுதம் (40), குப்பாய் (37), ஆகாஷ் (20), ரமேஷ் (37), சரத்குமாா் (14), ஆறுமுகம் (50), அன்பழகன் (36), கிருஷ்ணவேனி (12), ஏழுமலை (50), புகழேந்தி (27), குமாா் (62) உள்ளிட்ட 17 போ் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் செங்கம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

உயிரிழந்த சுப்பிரமணியின் சடலம் உடல்கூறு பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. விபத்து குறித்து மேல்செங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com