திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 2 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.
மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 71 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நபா்களின் மொத்த எண்ணிக்கை 50,862-ஆக உயா்ந்தது.
இதனிடையில், கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 2 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 623-ஆக அதிகரித்தது. இதுவரை 49,118 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். மருத்துவமனைகளில் தற்போது 1,121 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.