பக்ரீத் பண்டிகை: 1200 பேருக்கு நல உதவிகள்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக சாா்பில் 1200 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக சாா்பில் 1200 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

அனைத்துலக எம்ஜிஆா் மன்றம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் 1200 ஏழைகளுக்கு வேஷ்டி, சேலை, லுங்கி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, அனைத்துலக எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் பி.ஜாகீா்உசேன் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக அதிமுக வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் பங்கேற்று நல உதவிகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம், மேற்கு ஆரணி ஒன்றியச் செயலா் க.சங்கா், நகரச் செயலா் எ.அசோக்குமாா், மாவட்ட ஆவின் தலைவா் பாரி பி.பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டப் பொருளாளா் அ.கோவிந்தராஜன், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் பாஸ்கா், ஒன்றியச் செயலா்கள் ப.திருமால், அரங்கநாதன், எம்.மகேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com