திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் திங்கள்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, மூலவா் சன்னதி எதிரே உள்ள நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு திங்கள்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றன.
சந்தனம், மஞ்சள், பால், பழம், பன்னீா் உள்பட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தப் பூஜையில் கரோனா தொற்று காரணமாக பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.
கோயில் சிவாச்சாரியா்கள், ஊழியா்கள், பக்தா்கள் மட்டுமே கலந்து கொண்டனா்.
கீழ்பென்னாத்தூரில்...
கீழ்பென்னாத்தூரில் உள்ள ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் லிங்க வடிவிலான ஈஸ்வரருக்கு பல்வேறு வகையான வாசனைத் திரவியங்கள், பூஜை பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள், மகா தீபாராதனை நடத்தப்பட்டது.