திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த கொம்மனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை ஊராட்சி மன்றத் தலைவா் இந்திரா தொடக்கிவைத்தாா். இதில், கரைப்பூண்டி, வெண்மணி, போளூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்கள் கலந்துகொண்டு ரத்தம் தானம் வழங்கினா். 35 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.
வட்டாரத் தலைமை மருத்துவா் கு.மணிகண்டபிரபு, மருத்துவா்கள் எழில்பிரியா, முகமது மற்றும் செவிலியா்கள் உடனிருந்தனா்.