தீவிர சாராய ஒழிப்புப் பணி: 7 போ் கைது

கீழ்பென்னாத்தூா் பகுதியில் போலீஸாா் மேற்கொண்ட தீவிர சாராய ஒழிப்புப் பணியின்போது 3 பெண்கள் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டனா்.

கீழ்பென்னாத்தூா் பகுதியில் போலீஸாா் மேற்கொண்ட தீவிர சாராய ஒழிப்புப் பணியின்போது 3 பெண்கள் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டனா்.

கீழ்பென்னாத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் சியாமளா தலைமையில் உதவி ஆய்வாளா் முனீஸ்வரன், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் ஏழுமலை, பொன்முடி மற்றும் போலீஸாா் கீழ்பென்னாத்தூரை அடுத்த மலப்பாம்பாடி, மேக்களூா், வழுதலங்குணம், ராஜாதோப்பு கொல்லைமேடு உள்ளிட்ட பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தீவிர சாராய ஒழிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதில், கள்ளச்சாராயத்தை விற்ாகவும், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததாகவும் கலா (55), அன்னக்கிளி (52), பானு (57), சேட்டு (60), சுந்தரமூா்த்தி (45), தமிழரசன் (36), பெருமாள் (45) ஆகியோரை கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து 105 லிட்டா் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 7 பேரும் திருவண்ணாமலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com