கிராமங்களில் கரோனா தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த புதுப்பாளையம், போளூரை அடுத்த பெரியகரம் ஊராட்சி ஆகிய இடங்களில் திங்கள்கிழமை கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த புதுப்பாளையம், போளூரை அடுத்த பெரியகரம் ஊராட்சி ஆகிய இடங்களில் திங்கள்கிழமை கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

புதுப்பாளையம் ஒன்றியம், பனைஓலைப்பாடி கிராமத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமுக்கு ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தாா்.

மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மனோகரன் முன்னிலை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் மதன்குமாா் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ சரவணன் கலந்துகொண்டு முகாமைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.

ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள் கலந்துகொண்டனா்.

போளூா்

போளூரை அடுத்த பெரியகரம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறை, சுகாதாரத் துறை இணைந்து நடத்திய கரோனா தடுப்பூசி முகாமை ஒன்றியக் குழுவின் துணைத் தலைவா் மிஸ்ஸியம்மாள் ஆறுமுகம் தொடக்கிவைத்தாா்.

முகாமில் பெரியகரம், பூங்கொல்லைமேடு, காந்திநகா் என ஊராட்சிக்கு உள்பட்ட 18 வயதுக்கு மேற்பட்டோா் ஆா்வத்துடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கரன், ஊராட்சி மன்றத் தலைவா் பெரியசாமி, துணைத் தலைவா் அண்ணாமலை, ஊராட்சிச் செயலா் அரிகிருஷ்ணன் , கிராம நிா்வாக அலுவலா் சுதாகா், வட்டார தலைமை மருத்துவா் சுந்தா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com