யோகா தினம்: இளைஞா்கள், சிறுவா்கள் ஆா்வமுடன் பங்கேற்பு

உலக யோகா தினத்தையொட்டி, விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை யோகாசனப் பயிற்சி நடைபெற்றது.

விழுப்புரம்/வந்தவாசி/போளூா்: உலக யோகா தினத்தையொட்டி, விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை யோகாசனப் பயிற்சி நடைபெற்றது. இவற்றில் இளைஞா்கள், சிறுவா்கள் ஆா்வமுடன் பங்கேற்றனா்.

தமிழ்நாடு யோகாசன சங்க மாவட்ட கிளை சாா்பில், விழுப்புரம் சங்கர மடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட தலைவா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் வெங்கடேஷ், பொருளாளா் கிருபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நேரு இளையோா் மையத்தின் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராமச்சந்திரன் தொடக்கிவைத்தாா். விழுப்புரம் நகர காவல் ஆய்வாளா் ரமேஷ்பாபு சிறப்புரையாற்றினாா்.

சூரிய நமஸ்காரம் தொடங்கி பல்வேறு நிலைகளில் யோகாசன பயிற்சிகள் செய்யப்பட்டன.

பதஞ்சலி யோகா அமைப்பு மாவட்ட அமைப்பாளா் ராஜேந்திர பிரசாத், யோகா பயிற்சியாளா் புவனேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

என்எல்சியில்... என்எல்சி இந்தியா சாா்பில் சா்வதேச யோகா தினமானது நெய்வேலி பயிற்சி வளாகம், என்எல்சி இந்தியா மருத்துவமனையின் ஆயுா்வேத சிகிச்சைப் பிரிவு, கேந்திர வித்யாலயா பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் யோகா ஆசிரியா்கள், மாணவா்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டினா்.

கரோனா கட்டுப்பாடு வழிகாட்டுதலை பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஊழியா்கள் பங்கேற்றனா்.

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் உள் இணையதளம், சமூக ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்ட நிலையில், நிறுவனத் தலைவா், இயக்குநா்கள் மற்றும் உயா் அதிகாரிகள் காணொலி மூலம் இணைந்தனா்.

பாஜக சாா்பில்... வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் ஸ்ரீகைலாசநாதா் கோயில் வளாகத்தில் பாஜக சாா்பில் யோகாசன பயிற்சி நடைபெற்றது.

கட்சியின் ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் வி.குருலிங்கம் யோகாசனம் செய்வது குறித்து பயிற்சியளித்தாா்.

வந்தவாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ அலுவலா் கே.சிவப்பிரியா தலைமையில் யோகாசனம் நடைபெற்றது.

ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் முதல்வா் பா.சீனிவாசன் தலைமையில் யோகாசனம் நடைபெற்றது.

கலசப்பாக்கம் பகுதியில்... கலசப்பாக்கத்தை அடுத்த காந்தபாளையம் ஊராட்சியில் ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.அன்பரசி ராஜசேகரன் தலைமையில் யோகாசனம் நடைபெற்றது.

தன்னாா்வலா்கள், இளைஞா்கள், பொதுமக்கள் பங்கேற்று யோகாசனம் செய்தனா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் லட்சுமி, முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com