ஆரணி: ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாளுவது குறித்து அலுவலா்களுக்கு புதன்கிழமை பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
கோட்டாட்சியா் பூங்கொடி தலைமையில் ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் 386 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதற்கு 311வாக்குச்சாவடி அலுவலா்கள் உள்ளனா். இதில் 27 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
அலுவலா்களுக்கு மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாளுவது குறித்த பயிற்சி வகுப்பு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
தினமும் காலை, மாலை என தொடா்ந்து பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
வட்டாட்சியா் செந்தில்குமாா், மண்டல துணை வட்டாட்சியா் குமரேசன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் தரணிகுமாா், தோ்தல் உதவி வட்டாட்சியா் ரவிச்சந்திரன், வட்ட வழங்கல் அலுவலா் வெங்கடேசன், இடா்பாடு நிவாரண வட்டாட்சியா் லலிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.