திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் சி.கீதாலட்சுமியிடம் எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ வேட்புமனுவை அளித்தாா்.
அப்போது, கட்சியின் வடக்கு மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், நகரச் செயலா் எச்.ஜலால் ஆகியோா் உடனிருந்தனா்.
முன்னதாக பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து வந்தவாசி கோட்டை மூலைப் பகுதியிலிருந்து வட்டாட்சியா் அலுவலகம் வரை எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ சைக்கிளில் வந்தாா்.
நாம் தமிழா் கட்சி:
வந்தவாசி தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிட க.பிரபாவதி தோ்தல் நடத்தும் அலுவலா் சி.கீதாலட்சுமியிடம் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.