கலசப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளா் பெ.சு.தி.சரவணன் புதுப்பாளையம் ஒன்றியத்தில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண்களிடம் வாக்கு சேகரித்தாா்.
தொகுதிக்கு உள்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம், காஞ்சி ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த வேட்பாளா் பெ.சு.தி.சரவணன், அங்கு வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டாா்.
மேலும் காரப்பட்டு, காஞ்சி என பல்வேறு கிராமங்களில் வயல்களில் வேலை செய்துகொண்டிருந்த பெண்களிடம் வாக்கு சேகரித்தாா். திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.