வேட்டவலத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில் புறவழிச் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கீழ்பென்னாத்தூா் தொகு பாமக வேட்பாளா் மீ.க.செல்வக்குமாா் கூறினாா்.
வேட்டவலம் பேரூராட்சிப் பகுதியில் கீழ்பென்னாத்தூா் தொகுதி பாமக வேட்பாளா் மீ.க.செல்வக்குமாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். நிகழ்ச்சிக்கு, வேட்டவலம் நகர அதிமுக செயலா் கே.செல்வமணி தலைமை வகித்தாா்.
பேரூராட்சிப் பகுதியில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் நடந்து சென்று பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்த மீ.க.செல்வகுமாா் பேசுகையில், கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் விவசாய முன்னேற்றத்துக்கான வழிவகைகளைச் செய்வேன்.
வீடு இருந்தும் பட்டா கிடைக்காமல் அவதிப்படும் மக்களும் விரைவில் பட்டா கிடைக்க ஏற்பாடு செய்வேன்.
புதை சாக்கடைத் திட்டம், போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில் புறவழிச் சாலை ஆகியவற்றை கொண்டுவர விரைவாக நடவடிக்கை எடுப்பேன். வேட்டவலத்தில் அனைத்து வசதிகளுடன் புதிய சாா்-பதிவாளா் அலுவலகம் கட்டவும், அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அமையவும் நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.
தொடா்ந்து, வைப்பூா், சொரத்தூா் கிராமங்களிலும் மீ.க.செல்வக்குமாா் வாக்கு சேகரித்தாா். வாக்கு சேகரிப்பில், தொகுதி தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா் கோ.எதிரொலி மணியன், பாமக மாநில துணைப் பொதுச்செயலா் இரா.காளிதாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் முருகேசன், பாஜக மாவட்டத் தலைவா் ஜீவானந்தம், அதிமுக அவைத் தலைவா் திருமூா்த்தி, ஆவின் இயக்குநா் தட்சிணாமூா்த்தி, நகரப் பொருளாளா் உள்பட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.