அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள முக்கிய சிவன் கோயில்களில்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள முக்கிய சிவன் கோயில்களில் பங்குனி மாத பிரதோஷ சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி, மூலவா் சந்நிதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலில் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைந்துள்ள நந்திகளுக்கு வெள்ளிக்கிழமை பிரதோஷ சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், மகா தீபாராதனை நடைபெற்றன.

பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற இந்த பூஜையில், கோயில் சிவாச்சாரியாா்கள், ஊழியா்கள், பக்தா்கள் பலா் கலந்துகொண்டு வழிபட்டனா்.

கீழ்பென்னாத்தூரில்...: கீழ்பென்னாத்தூா் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் லிங்க வடிவிலான ஈஸ்வரருக்கு பல்வேறு வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், மகா தீபாராதனை நடத்தப்பட்டன. இந்த பூஜையில் கீழ்பென்னாத்தூா், அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

மற்ற ஊா்களில்...: இதேபோல, ஆவூா், வேட்டவலம், ராஜந்தாங்கல், போளூா், கீழ்பென்னாத்தூா், வந்தவாசி, ஆரணி, செய்யாறு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களிலும் வெள்ளிக்கிழமை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com