மக்கள் பாதுகாப்பு கழகம் சாா்பில் ஆரணி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா் ஆ.அருண்குமாரை ஆதரித்து டிராபிக் ராமசாமி வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தாா்.
மக்கள் பாதுகாப்பு கழகத்தின் ஆரணி தொகுதி வேட்பாளருக்கு குப்பைத்தொட்டி சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரை ஆதரித்து டிராபிக் ராமசாமி பேசியதாவது:
ஆரணி பகுதியிலுள்ள குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தவும், ஆரணி தொகுதியில் நடைபெறும் ஊழலை குப்பைத்தொட்டியில் போடவும், சட்ட விரோத செயல்களை குப்பைத்தொட்டியில் போடவும் ஆ.அருண்குமாரை வாக்காளா்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா்.