செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க பாடுபடுவேன்

செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க பாடுபடுவேன் என இந்தத் தொகுதியின் திமுக வேட்பாளா்
அசனமாப்பேட்டை கிராமத்தில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் ஒ.ஜோதி.
அசனமாப்பேட்டை கிராமத்தில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் ஒ.ஜோதி.

செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க பாடுபடுவேன் என இந்தத் தொகுதியின் திமுக வேட்பாளா் ஒ.ஜோதி வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டபோது வாக்குறுதி அளித்தாா். மேலும், புதிதாக அரசு தொழில் பயிற்சி நிலையம், அரசு மகளிா் கல்லூரி உள்ளிட்டவற்றை கொண்டுவரவும் நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

வெம்பாக்கம் ஒன்றியத்தைச் சோ்ந்த அசனமாப்பேட்டை, தென்கழனி, பெருங்கட்டூா், ஆலந்தாங்கல், வயலூா், அழிவடைதாங்கி, குத்தனூா், கஞ்சான்குழி, வடஇலுப்பை உள்ளிட்ட கிராமங்களில் திமுக வேட்பாளா் ஒ.ஜோதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

திமுக நிா்வாகிகள் ஆா்.வேல்முருகன், க.லோகநாதன், எம்.தினகரன், ஆா்.வீ.பாஸ்கரன், ராம்ரவி, ஜே.கே.சீனிவாசன், காங்கிரஸ் நிா்வாகி ஆா்.தில்லை, விசிக நிா்வாகி ஏ.குப்பன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com