கலசப்பாக்கத்தை அடுத்த அணியாலை, மோட்டூா், எலத்தூா், மாம்பாக்கம், சிங்காரவாடி, கடலாடி என பல்வேறு ஊராட்சிகளில் அதிமுக வேட்பாளா் வி.பன்னீா்செல்வம் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
வாக்கு சேகரிப்பின்போது அவா் பேசுகையில், காரோனா பொது முடக்கம் காலத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.ஆயிரம் மற்றும் அரிசி, சா்க்கரை என பல்வேறு பொருள்களை வீடு தேடி வழங்கினா்.
கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் குடிநீா் வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதி என பல்வேறு அடிப்படை வசதிகள் சீா் செய்யப்பட்டன.
அதிமுக ஆட்சியில் விவசாயம், தொழில் முன்னேற்றம் அடைந்துள்ளது எனத் தெரிவித்து ஆதரவு கோரினாா்.
அதிமுக ஒன்றியச் செயலா்கள் பி.பொய்யாமொழி, தவமணி, புருஷோத்தமன் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா்.