செய்யாறு தொகுதியைச் சோ்ந்த நிலை கண்காணிப்புக் குழு - 2 அலுவலா் ஏ.மணிகண்டன் தலைமையிலான குழுவினா் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் அப்துல்லாபுரம் சோதனைச்சாவடி அருகே செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனா்.
இதில், சரக்கு ஆட்டோவில் உரிய ஆவணமின்றி ரூ.ஒரு லட்சத்து 6, 650-யை எடுத்துச் செல்வது தெரிய வந்து பறிமுதல் செய்தனா்.
மேலும், சரக்கு ஆட்டோவில் வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவா் உத்திரமேரூா் வட்டம், திருப்புலிவனம் கிராமத்தைச் சோ்ந்த பிஸ்கட் வியாபாரி சதீஷ்குமாா் என்பதும், கடைகளில் வசூலான பணத்தைக் கொண்டு செல்வதும் தெரிய வந்தது.
பறிமுதல் செய்த பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் செய்யாறு தொகுதி உதவித் தோ்தல் அலுவலா் சு.திருமலையிடம் ஒப்படைத்தனா். பின்னா், அந்தப் பணம் செய்யாறு சாா்-கருவூலத்தில் செலுத்தப்பட்டது.