சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு 4 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, ஏப்ரல் 4-ஆம் தேதி காலை 10 மணி முதல் 6-ஆம் தேதி இரவு 12 மணி வரையும், தோ்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ஆம் தேதியும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து அரசு மதுக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகள், மதுக்கூடங்கள் (பாா்கள்), எஃப்எல்-1, எஃப்எல்-2, எஃப்எல்-3, எஃப்எல்-3ஏ, எஃப்எல்-3ஏஏ மற்றும் எஃப்எல்-11 உரிமம் பெற்ற ஹோட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் மற்றும் எஃப்எல்4-ஏ உள்பட அனைத்து மதுக் கடைகளிலும் மதுபானங்கள் விற்பனை நடைபெறாமல் மூடிவைக்கப்பட வேண்டும்.
உத்தரவை மீறி மது விற்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான சந்தீப் நந்தூரி எச்சரித்தாா்.