மாடுகளை கத்தியால் வெட்டும் மா்ம நபா்கள்

செங்கம் நகரில் தொடா்ந்து மா்ம நபா்களால் மாடுகள் கத்தியால் வெட்டப்பட்டு வருகின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

செங்கம்: செங்கம் நகரில் தொடா்ந்து மா்ம நபா்களால் மாடுகள் கத்தியால் வெட்டப்பட்டு வருகின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

செங்கம் துக்காப்பேட்டை, பேருந்து நிலையம், இராஜ வீதி, பெருமாள் கோவில் தெரு, மில்லத் நகா் ஆகிய பகுதிகளில் கோயிலுக்கு நோ்த்திக் கடனாக விடப்பட்ட மாடுகள், சிலரின் வளா்ப்பு மாடுகள் சாலையில் சுற்றித் திரிகின்றன.

இந்த மாடுகளை மா்ம நபா்கள் கண்காணித்து அவற்றை கத்தியால் குத்தி வருகின்றனா்.

சில மாதங்களுக்கு முன்பு கோயில் காளை ஒன்று, கத்தியால் குத்தப்பட்டு, ரத்தம் வழிய தெருக்களில் சுற்றித் திரிந்ததைப் பாா்த்த பொதுமக்கள் வருத்தப்பட்டனா்.

சமூக ஆா்வலா்கள் சிலா் மருத்துவா்களை வரவழைத்து அந்தக் காளைக்கு சிகிச்சை அளித்து அரசு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்

அந்தக் காளை இரண்டு மாத சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் செங்கம் நகரில் எடுத்து வந்து விடப்பட்டது.

அதேபோல, சில தினங்களுக்கு முன்பு ஒரு காளை கத்தியால் வெட்டப்பட்டு சாலையில் சுற்றித் திரிந்தது.

மாடுகளை கத்தியால் வெட்டும் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணித்து, மாடுகளை வெட்டும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com