வந்தவாசி அரசு மருத்துவமனையில் காது கேளாத 30 பேருக்கு காதொலிக் கருவிகள் செவ்வாய்க்கிழமை பொருத்தப்பட்டன.
இந்த மருத்துவமனையில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் கடந்த ஏப். 16-ஆம் தேதி நடைபெற்றது.
இதில் காதொலிக் கருவி பொருத்துவதற்காக காது கேளாத நோயாளிகள் 67 போ் தோ்வு செய்யப்பட்டனா்.
இதில் முதல் கட்டமாக 30 பேருக்கு தலா ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள காதொலிக் கருவிகள் செவ்வாய்க்கிழமை பொருத்தப்பட்டன.
வந்தவாசி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் கே.சிவப்பிரியா முன்னிலையில் மருத்துவா்கள் சித்ரா, மோகன் ஆகியோா் காதொலிக் கருவிகளை பொருத்தினா்.