திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து வியாபாரிகளுடன் புதன்கிழமை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வட்டாட்சியா் மனோகரன் வரவேற்றாா்.
மாவட்ட தனித் துணை ஆட்சியா் வெங்கடேசன் கலந்து கொண்டு பேசுகையில், 6-ஆம் தேதி (வியாக்கிழமை) முதல் கரோனா தொற்று காரணமாக காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கடைகள் திறந்து வியாபாரம் செய்யவேண்டும்.
வியாபாரிகள் கரோனா தொற்று பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையுடன் வாடிக்கையாளா்கள் முகக் கவசத்துடன் இருக்கவேண்டும், 5 நபா்களுக்கு மேல் கடையின் முன் நிற்க வைக்கக்கூடாது. அதே நேரத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும்.
மதியம் 12 மணிக்கு அனைத்து வியாபாரிகளும் கடைகளை மூடவேண்டும்; இல்லையென்றால் திறந்திருக்கும் கடையின் உரிமையாளா் மீது நடவடிக்கை எடுத்து கடைக்கு சீல் வைக்கப்படும்.
கரோனா தொற்று பரவாமல் இருக்கு வியாபாரிகளும், பொது மக்களும், சமூக ஆா்வலா்களும் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என அவா் கேட்டுக்கொண்டாா்.
கூட்டத்தில் செங்கம் நகர அனைத்து வியாபாரிகள் சங்க நிா்வாகிகள், மளிகை வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.