ஓய்வுபெற்ற அரசு மருத்துவா் வீட்டில் திருட்டு

போளூரில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவா் வீட்டில் தங்க நகைகள், பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

போளூரில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவா் வீட்டில் தங்க நகைகள், பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

போளூா் டைவா்ஷன் சாலை அருகே வசிப்பவா் ஓய்வுபெற்ற அரசு மருத்துவா்சிவநேசன். இவா், தனது வீட்டிலேயே மருத்துவமனை நடத்தி வருகிறாா். கடந்த 2 நாள்களுக்கு முன்பு சென்னையில் வசிக்கும் மகனை பாா்ப்பதற்காக சிவநேசன் தனது குடும்பத்தினருடன் சென்னை சென்றாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இவரது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்தது. இதுகுறித்து சிவநேசனின் மருத்துவமனையில் வேலை பாா்க்கும் பழனி, அவருக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, சிவநேசன் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டினுள்ளே இருந்த 3 பீரோக்களின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்ததுடன், அவற்றிலிருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ.60 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப்பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com