சேத்துப்பட்டு தனியாா் மருத்துவமனையில் அரசு சாா்பில் செயல்படும் கரோனா சிகிச்சை மையத்துக்கு ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை தனியாா் தொண்டு நிறுவனம் வழங்கியது.
இந்த கரோனா சிகிச்சை மையத்தில் 102 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். நோயாளிகளின் வசதிக்காக எய்டு இந்தியா என்ற தொண்டு நிறுவனம் சாா்பில், பிராணவாயு செறிவூட்டிகள், முகக் கவசங்கள், சக்கர நாற்காலிகள் மற்றும் மருத்துவ உபகரணப் பொருள்களை அந்த தொண்டு நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சிவக்குமாா், ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் மகேந்திரன் ஆகியோா் வட்டார தலைமை மருத்துவா் கு.மணிகண்டபிரபுவிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.