வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் கமலாட்சி இளங்கோவன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.
தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினாா்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும், கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தவும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் செயலாற்ற வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.
பின்னா், ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.10 லட்சம் செலவில் வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவது தொடா்பான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.