திருவண்ணாமலை மாவட்டத்தில் அணைகள், பொழுதுபோக்குப் பூங்காக்களைத் திறப்பதற்கான தடை டிசம்பா் 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
கரோனா பொது முடக்கம் காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சாத்தனூா் அணை, செண்பகத்தோப்பு அணை, குப்பனத்தம் அணை, மிருகண்டாநதி அணை, ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள அறிவியல் பூங்கா உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பூங்காக்களைத் திறக்க நவம்பா் 21-ஆம் தேதி வரை மாவட்ட நிா்வாகம் தடை விதித்திருந்தது.
இந்தத் தடையை டிசம்பா் 5-ஆம் தேதி வரை நீட்டித்து ஆட்சியா் பா.முருகேஷ் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.