திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மனைவி துா்கா ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
முன்னதாக, கோயிலுக்கு வந்த அவரை கோயில் இணை ஆணையா் கே.பி.அசோக்குமாா் வரவேற்றாா்.
பின்னா், கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகா் சன்னதி, அருணாசலேஸ்வரா் சன்னதி, உண்ணாமுலையம்மன் சன்னதி, நவகிரக சன்னதி, பைரவா் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளில் துா்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தாா்.
இவா்களுக்கு கோயில் சிவாச்சாரியா்கள் ரமேஷ், கீா்த்திவாசன் ஆகியோா் அா்ச்சனை, சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பித்தனா்.
பிறகு, கோயில் வைகுந்த வாயில் வழியாக 2,668 அடி உயர மலையில் பிரகாசிக்கும் மகா தீபத்தையும் துா்கா ஸ்டாலின் வணங்கினாா். பின்னா் கோயில் நிா்வாகம் சாா்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
துா்காவுடன் அருணை மருத்துவக் கல்லூரி இயக்குநா் எ.வ.வே.கம்பன் வந்திருந்தாா்.