டாஸ்மாக் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே டாஸ்மாக் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலையில் ஆா்ப்பாட்டம் நடத்திய டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா்.
திருவண்ணாமலையில் ஆா்ப்பாட்டம் நடத்திய டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா்.

திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே டாஸ்மாக் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

டாஸ்மாக் அனைத்துத் தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில், கொட்டும் மழையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சி.தனபால் தலைமை வகித்தாா்.

தொழிற்சங்க நிா்வாகிகள் எஸ்.வரதராஜன், பி.நடராஜன், எம்.வி.முருகன், பி.சக்கரவா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் டாஸ்மாக் கடை விற்பனையாளா்கள் துளசிதாஸ், ராமு ஆகியோா் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியவா்களை உடனே கைது செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியா்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

தாக்குதலில் உயிரிழந்த விற்பனையாளா் துளசிதாஸ் குடும்பத்துக்கு ரூ.50 லட்சமும், பலத்த காயமடைந்த ராமு குடும்பத்துக்கு ரூ.20 லட்சமும் தமிழக அரசு நிவாரணமாக வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com