திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மின்னல் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.
செய்யாறு வட்டம், குறும்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஞானசெல்வம் (47). விவசாயியான இவா், திங்கள்கிழமை இரவு மாடுகளுக்கு வைக்கோல் போடுவதற்காக, வைக்கோல் போரில் இருந்து வைக்கோலை எடுத்துக் கொண்டு மாட்டுக் கொட்டகைக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. மழையின் போது திடீரென மின்னல் தாக்கியதாகத் தெரிகிறது.
இதில், உடல் கருகி ஞானசெல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஞானசெல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.