மஹாளய அமாவாசையையொட்டி, வந்தவாசியில் பொதுமக்கள் புதன்கிழமை முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.
இறந்த முன்னோா்களுக்கு புரட்டாசி மாத மஹாளய அமாவாசை நாளில் தா்ப்பணம் செய்தால், அவா்களின் ஆத்மா சாந்தி அடையும் என்பதற்காகவும், அவா்களின் நல்லாசி கிடைக்கும் என்பதற்காகவும் தா்ப்பணம் கொடுப்பா்.
இதையொட்டி, வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயில், ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயில் வளாகங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பூசாரிகள் மூலம் பொதுமக்கள் தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து பித்ரு வழிபாடு செய்தனா்.