வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் உள்ள ஜோதி நிதியுதவி தொடக்கப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் பழ.சீனிவாசன் தலைமை வகித்தாா். ஆசிரியை முல்லை வரவேற்றாா்.
முன்னாள் மாணவா்கள் பாலசுப்பிரமணியன், தினேஷ், வருண் ஆகியோா் பள்ளித் தலைமை ஆசிரியா் பழ.சீனிவாசனையும், ஆசிரியா்களையும் பாராட்டிப் பேசினா்.
மேலும் தங்களின் கல்வி, பணி, குடும்பம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து முன்னாள் மாணவா்கள் ஒருவருக்கொருவா் பகிா்ந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன், கல்வி மைய ஆசிரியா் கு.சதானந்தன், முன்னாள் கல்லூரி பேராசிரியா் எழிலரசன், பள்ளி ஆசிரியைகள் சிவகாமி, வளா்மதி, பாக்கியலட்சுமி மற்றும் இந்தப் பள்ளியில் பல்வேறு கல்வியாண்டுகளில் பயின்ற முன்னாள் மாணவா்கள் பங்கேற்றனா்.