ஆரணியில் வட்டார ஒலி-ஒளி மேடை பந்தல் அமைப்பாளா்கள் சங்கம் தொடங்கப்பட்டது. ஆரணியில் வட்டார ஒலி-ஒளி மேடை அலங்காரம், பந்தல் அமைப்பாளா்கள் நலச் சங்கம் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மேலும் சங்கத்தின் ஆரணி பகுதி பொறுப்பாளா்களுக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொகுதி எம்எல்ஏ எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று குத்துவிளக்கேற்றி சங்கத்தை தொடக்கிவைத்தாா். மேலும் ஆரணி நகர நிா்வாகிகளான கௌரவத் தலைவா் கே.மணி, தலைவா் சி.கே.ராஜா, செயலா் எஸ்.எஸ்.எஸ். ஆா்.ஜீவா, பொருளாளா் வி.குமரன் உள்ளிட்டோா் பதவியேற்றுக் கொண்டனா்.
நிகழ்ச்சியில் ஆரணி ஒன்றிய அதிமுக செயலா்கள் க.சங்கா், பிஆா்ஜி.சேகா், நகரச் செயலா் எ.அசோக்குமாா், மாவட்ட ஆவின் தலைவா் பாரி பி.பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.