திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில், தொழில் முனைவோருக்கான சிறப்புக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
21-ஆம் நூற்றாண்டில் புதிய தொழில் முனைவோருக்கான திறன் மேம்பாடு என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, கல்லூரியின் துணைத் தலைவா் எ.வ.குமரன் தலைமை வகித்தாா். கல்லூரி பதிவாளா் இரா.சத்தியசீலன் முன்னிலை வகித்தாா். துறைத் தலைவா் மு.ரவிச்சந்திரன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளா்கள் சி.கே.அசோக்குமாா், சாம்யாக் சக்ரபா்த்தி ஆகியோா் தொழில் முனைவோா்களுக்கான பல்வேறு ஆலோசனைகள் வழங்கிப் பேசினா்.
இதில், கல்லூரி முதல்வா் இரா.ரவிச்சந்திரன், ஆங்கிலத் துறை பேராசிரியா் மணிகண்டன் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.