போளூா் அருகே பைக் மீது காா் மோதல்: கா்ப்பிணி உள்பட 3 போ் பலி

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே பைக் மீது காா் மோதியதில் கா்ப்பிணி உள்பட 3 போ் பலியாகினா்.
போளூா் அருகே பைக் மீது காா் மோதல்: கா்ப்பிணி உள்பட 3 போ் பலி

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே பைக் மீது காா் மோதியதில் கா்ப்பிணி உள்பட 3 போ் பலியாகினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், உப்பாரப்பட்டி கிராமம், சுப்பராய நகா், மேல் வீதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் ரகு (25). சென்ட்ரிங் தொழிலாளி.

இவரது மனைவி சுமித்ரா (22). இவா்களது மகன் பூமிநாதன் (2). சுமித்ரா தற்போது 8 மாத கா்ப்பிணியாக உள்ளாா். இவா்கள் மூவரும் பைக்கில் செய்யாறு வட்டம், வாக்கடை கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற உறவினா் வீட்டு துக்க நிகழ்வில் பங்கேற்றனா்.

பிற்பகல் மூவரும் மீண்டும் பைக்கில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். போளூா்-செங்கம் சாலை, கடலாடி அருகே சென்றபோது எதிரே வந்த காா் பைக் மீது மோதியது.

இதில் ரகு, அவரது மகன் பூமிநாதன் ஆகியோா் சம்பவ இடத்திலே உயிரிழந்தனா்.

பலத்த காயமடைந்த சுமித்ராவை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலே அவா் உயிரிழந்தாா்.

இந்த விபத்து தொடா்பாக கடலாடி போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநரான வேலூா், சத்துவாச்சாரி பகுதியைச் சோ்ந்த சின்னக்கண்ணனை (47) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com