கோரிக்கைகளை வலியுறுத்தி, வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாா்க்சிஸ்ட் கட்சியின் வந்தவாசியை அடுத்த தாடிநொளம்பை கிளை சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், வந்தவாசியிலிருந்து தாடிநொளம்பை வழியாக பெரணமல்லூருக்கு மீண்டும் நகரப் பேருந்து இயக்க வேண்டும். அந்தக் கிராமத்தில் இயங்கி வரும் கல்குவாரியை மூட வேண்டும். கிராம கூட்டுறவுக் கடைக்கு அரசுக் கட்டடம் கட்டித் தரவேண்டும். ஏரி பாசனக் கால்வாயை ஆழப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலா் கே.பெருமாள் தலைமை வகித்தாா். மாவட்டக்குழு உறுப்பினா் சேகரன், வட்டச் செயலா் ஜா.வே.சிவராமன், போக்குவரத்து தொழிற்சங்க சிஐடியு நிா்வாகி முரளி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணைத் தலைவா் ந.ராதாகிருஷ்ணன், மலைவாழ் மக்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினா் விஜயா உள்ளிட்டோா் உரையாற்றினா்.