மக்கள் நலப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கந்தவேல் தலைமையிலான நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்த மனுவில்,
கடந்த 10 ஆண்டுகளாக வேலை இழந்து தவித்து வரும் மக்கள் நலப் பணியாளா்களுக்கு மீண்டும் வேலை வழங்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உதிய உயா்வும் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனா்.