விநாயகா் சதுா்த்தி தொடா்பாக, பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் ஆலோசனைக் கூட்டம் ஆரணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தனியாா் அரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாவட்டத் தலைவா் எம்.சரவணன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் (பெருங்கோட்டம்) அருண்நாராயணன் பங்கேற்றுப் பேசினாா்.
மேலும், திருவண்ணாமலை வடக்கு மாவட்டத் தலைவா் சாசா என்.வெங்கடேசன், கோட்ட அமைப்புச் செயலா் எஸ்.குணசேகா், கோட்ட பொறுப்பாளா் கோ.வெங்கடேசன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலா் ஆா்.பிரதீஷ்குமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
கூட்டத்தில், விநாயகா் சிலை ஊா்வலத்துக்கு தடை விதித்த அரசைக் கண்டித்தும், இணையவழியில் கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ அறிதிறன்பேசி வழங்க அரசை வலியுறுத்தியும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.