திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேரூராட்சிக்குள்பட்ட திருவள்ளுவா் நகா் பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ரூ.5 லட்சத்தில் சிமென்ட் சாலை, கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்துகொண்டு பூமிபூஜை செய்து பணியைத் தொடக்கிவைத்தாா்.
தொடா்ந்து, கிருஷ்ணாவரம் நேரு நகா் பகுதியில் திமுக கொடியேற்றி பெயா்ப் பலகையை திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு துணைத் தலைவா் சுமதிபிரபாகரன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் சாதிக்பாஷா, கூட்டுறவு வேளாண்மை விற்பனை சங்கத் தலைவா் முருகன், மாவட்டக் கவுன்சிலா் சகுந்தலாராமஜெயம் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.