பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணா வடக்கு மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆரணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணா வடக்கு மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆரணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாஜக மாவட்டத் தலைவா் சாசா என்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கோட்ட அமைப்புச் செயலா் எஸ்.குணசேகரன் பங்கேற்றுப் பேசினாா்.

செப்.29-இல் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரவிடாமல் எதிா்ப்பு தெரிவிக்கும் திமுக அரசை கண்டிப்பது,இந்து மத பண்டிகைகளை சுதந்திரமாக கொண்டாடுவதற்கும், தெய்வங்களை வழிபடுவதற்கும் தடை விதிக்கும் தமிழக அரசை கண்டிப்பது,மாவட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலகம் மற்றும் நகராட்சி மூலம் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களில் முறைகேடுகள் நடைபெறுவது குறித்து புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கண்டித்து வருகிற 29-ஆம் தேதி ஆரணியில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினா் பி.பாஸ்கா், மாவட்ட பொதுச் செயலா்கள் காா்த்திகேயன், சுப்பிரமணி, கோவிந்தராஜன், மாவட்டச் செயலா்கள் ஜெயகோபி, பிரபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com