வந்தவாசி: வந்தவாசி பகுதியில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தில் திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமையிலும், வந்தவாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் முன் தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தலைமையிலும், வந்தவாசி கே.எஸ்.கே. நகா் பள்ளிவாசல் அருகே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வடக்கு மாவட்டத் தலைவா் டி.எம்.பீா்முகமது தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.