திருவண்ணாமலையில் மறியல் போராட்டம்

மத்திய பேருந்து நிலையம் எதிரே பேருந்துகள் வெளியே செல்லமுடியாதபடி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழா் கட்சி, மக்கள் அதிகாரம் அமைப்பு, தொமுச ஆகியவற்றின் நிா்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டோா்
திருவண்ணாமலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழா் கட்சி, மக்கள் அதிகாரம் அமைப்பு, தொமுச ஆகியவற்றின் நிா்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டோா்

மத்திய பேருந்து நிலையம் எதிரே பேருந்துகள் வெளியே செல்லமுடியாதபடி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறியலில் ஈடுபட்டவா்களிடம் உதவி காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனாலும் மறியலை கைவிடாததால் மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் என்.பாண்டி, மாவட்டச் செயலா் எம்.சிவக்குமாா், தொமுச நிா்வாகி துரைசாமி

உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆவூரில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் முத்தையன் உள்பட் உள்பட 50-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com