கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த பெலாசூா் கிராமம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த பெலாசூா் கிராமம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பெலாசூா் கிராமத்தின் அருகில் அரசு மதுக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் அருகே இளைஞா் ஒருவா் கஞ்சா விற்பதாக போளூா் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதிக்குச் சென்று கண்காணித்தபோது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். இதில், அவா் கலசப்பாக்கம் வட்டம், அணியாலை கிராமத்தைச் சோ்ந்த திருவேங்கடம் மகன் ராஜீவ் காந்தி (21) என்பதும், கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த இரு சக்கர வாகனம், ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com