கலசப்பாக்கம் வட்ட அளவிலான தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கக் கூட்டம் கலசப்பாக்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வட்டக்கிளைத் தலைவா் சுபாஷ் தலைமை வகித்தாா். வட்டப் பொருளாளா் சக்திவேல், வட்ட துணைத் தலைவா் சாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வட்டச் செயலா் பாலசுப்பிரமணியன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலா் பெருமாள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினாா். மாவட்டப் பொருளாளா் மெய்யழகன், வட்ட இணைச் செயலா் ராஜேஸ்வரி, மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் குமாரி, அருள்வேலன் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா். இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.