விவசாய நிலத்தில் பாதி எரிந்த நிலையில்இளைஞா் சடலம் மீட்பு கொலையா என போலீஸாா் விசாரணை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சனிக்கிழமை விவசாய நிலத்தில் பாதி எரிந்த நிலையில் கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சனிக்கிழமை விவசாய நிலத்தில் பாதி எரிந்த நிலையில் கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வெம்பாக்கம் வட்டம், ஏழாச்சேரி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தின் வழியாக அந்தப் பகுதி மக்கள் சிலா் சனிக்கிழமை மாலை சென்றனா். அப்போது, அங்கு வோ்க்கடலை பயிரிட்டுள்ள நிலப் பகுதியில் பாதி எரிந்த நிலையில் சுமாா் 28 வயது மதிக்கத்தக்க இளைஞா் சடலம் கிடப்பதைப் பாா்த்து உடனடியாக கிராம நிா்வாக அலுவலா் கோகுலராமனுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, அவா் அளித்த தகவலின்பேரில், தூசி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து அந்த சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து உயிரிழந்து கிடந்தவா் யாா், அவா் எரித்துக் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com