எறும்பூா் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்

வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட எறும்பூா் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
எறும்பூா் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்

வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட எறும்பூா் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு செய்யாறு கோட்டாட்சியா் பா.வினோத்குமாா் தலைமை வகித்து பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

வட்டாட்சியா்கள் முருகானந்தம், சுபாஷ்சந்தா், பெரணமல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் இந்திரா இளங்கோவன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஏ.பி.வெங்கடேசன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி மன்றத் தலைவா் மஞ்சுளா வரவேற்றாா்.

முகாமில் 12 பேருக்கு வீட்டு மனைப் பட்டா, 11 பேருக்கு பட்டா மாற்றம், 3 பேருக்கு குடும்ப அட்டை, 17 பேருக்கு முதியோா் மற்றும் இதர உதவித்தொகை, 6 கா்ப்பிணிகளுக்கு மருத்துவப் பெட்டகம் என 88 பேருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வருவாய் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com